முதலில் இந்த படத்தின் நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க இருந்த நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் கிட்டத்தட்ட கமிட் ஆகிவிட்டதாக தெரிகிறது. ஏற்கனவே விஜய் தேவரகொண்டா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ’நடிகையர் திலகம்’ என்ற படத்தில் நடித்திருந்தாலும், அவர்கள் ஜோடியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது முதல் முறையாக விஜய் தேவரகொண்டா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க இருப்பதால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ருக்மணி வசந்த் படத்தை கைப்பற்றிய கீர்த்தி சுரேஷ்
