புராணக்கதையில் சாய் தன்ஷிகா

சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கில் ‘மர்மதேசம்’ நாகா எழுதி இயக்கியுள்ள புராண தொடர், ‘ஐந்தாம் வேதம்’. அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இதில் சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய்.ஜி.மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் நடித்திருக்கின்றனர். ஹீரோயின் தனது தாயின் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள வாரணாசி செல்லும்போது, வழியில் தென்படும் ஒரு மர்ம நபர், பழங்கால நினைவுச்சின்னம் ஒன்றை அவரிடம் கொடுத்து, அதை தமிழ்நாட்டிலுள்ள ஒரு சாமியாரிடம் ஒப்படைக்கச் சொல்கிறார். ஐந்தாம் வேதத்தின் ரகசியங்களை உள்ளடக்கிய அப்பொருளை அடைவதற்கு பலபேர் தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், ஹீரோயினுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது மீதி கதை. இது வரும் 25ம் தேதி ஜீ5ல் ஒளிபரப்பு ஆகிறது.

The post புராணக்கதையில் சாய் தன்ஷிகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: