கடைசியில் இரு அணியினரும் கோல் போடாததால், பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட கொலம்பியா வீராங்கனைகள் 5 கோல்கள் போட்டு அசத்தினர். மாறாக, அர்ஜென்டினா அணி வீராங்கனைகளால் 4 கோல் மட்டுமே போட முடிந்தது. அதனால், 5-4 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இதைத் தொடர்ந்து, இன்று நடக்கும் மற்றொரு அரை இறுதிப் போட்டியில் பிரேசில், உருகுவே அணிகள் மோதவுள்ளன. இதில் வெல்லும் அணியுடன், கொலம்பியா அணி, வரும் ஆகஸ்ட் 3ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மோதும். முன்னதாக, 2வது இடத்துக்கான போட்டி, வரும் ஆகஸ்ட் 2ம் தேதி நடக்கவுள்ளது.
The post கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து: கலக்கலாய் சாதித்த கொலம்பியா இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்; ஷூட் அவுட்டில் 5 கோலடித்து வெற்றி appeared first on Dinakaran.
