இது குறித்து கென்னிங்டன் அரங்கம் தரப்பிலோ, இந்திய அணித் தரப்பிலோ எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்த இடத்தில், ‘பயிற்சி செய்யக் கூடாது’ என்று லீ கூறியதுதான் பிரச்னைக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, லீ ஃபோர்டிசிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘அவர் என்ன மாதிரி நடந்து கொண்டார் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். இதைப் பற்றி அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்’ என்றார். இதற்கிடையே, இந்திய அணியில், பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பெறுவார் என தகவல்கள் கூறுகின்றன.
The post விளையாட்டரங்கு பாதுகாவலருடன் கம்பீர் மோதல் appeared first on Dinakaran.
