பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காம் வந்தது எப்படி? – காங்கிரஸ்

டெல்லி : பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காம் வந்தது எப்படி? என்று மக்களவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கௌரவ் கோகோய் கேள்வி எழுப்பி உள்ளார். அதில், “ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அமைச்சர் ராஜ்நாத் சிங் நிறைய தகவல்களை இங்கே பகிர்ந்தார். ஆனால், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் எப்படி எல்லை தாண்டி வந்து பஹல்காமில் தாக்குதல் நடத்தினர்? என்பதை மட்டும் அவர் சொல்லவே இல்லை. ஒரு எதிர்க்கட்சியாக இதனைக் கேட்பது எங்களின் கடமை”இவ்வாறு தெரிவித்தார்.

The post பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காம் வந்தது எப்படி? – காங்கிரஸ் appeared first on Dinakaran.

Related Stories: