பந்தலூர், ஜூலை 28: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ளது சேரம்பாடி. இங்குள்ள அம்பலமூலா மதுவந்தால் பகுதியை சேர்ந்தவர் ரவி (53). இவர் கடந்த 21ம் தேதி மாயமானார். இது குறித்து குடும்பத்தினர் அம்பலமூலா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை தேடி வந்தனர். இந்நிலையில் கோட்டப்பாடி ஆதிவாசி காலனி வனப்பகுதியை ஒட்டி ஒரு ஆண் இறந்து கிடப்பதாக சேரம்பாடி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. உடலை மீட்ட போலீசார் பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் மாயமான ரவி என்பது தெரியவந்தது. இவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post அவலாஞ்சியில் 260 மிமீ கொட்டி தீர்த்தது மாயமான முதியவர் மர்மச்சாவு appeared first on Dinakaran.
