ஆர்சிபி வீரருக்கு எதிராக போக்சோவில் வழக்கு

ஜெய்ப்பூர்: ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை சேர்ந்த பந்து வீச்சாளர் யாஷ் தயாள், பாலியல் புகாரில் ஏற்கனவே சிக்கியுள்ள நிலையில், தற்போது, 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜெய்ப்பூரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிரிக்கெட்டில் வாய்ப்பு பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி ஓட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

The post ஆர்சிபி வீரருக்கு எதிராக போக்சோவில் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: