மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இளம் செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக் அசத்தல்!

ஜார்ஜியா: ஜார்ஜியாவில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் சீனாவைச் சேர்ந்த முன்னாள் சாம்பியன் ஜோங்யியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் (19) முன்னேறினார்.

உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் இதன் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சீனாவின் டான் ஜாங்கியுடன் மோதினார். இந்த போட்டியில் 1.5 – 0.5 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு திவ்யா தேஷ்முக் முன்னேறினார். இதன்மூலம் மகளிர் செஸ் உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை திவ்யா தேஷ்முக் பெற்றார். இதன்மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கும் தகுதி பெற்றுள்ளார்.

மற்றொரு அரையிறுதி போட்டியில் கோனேரு ஹம்பி, சீனாவின் டிங்ஜி லீயுடன் மோதினார். இந்த போட்டி டிராவில் முடிந்தது. அதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேற ஹம்பி இப்போது டை-பிரேக்கரில் டிங்ஜி லீயை எதிர்கொள்ள உள்ளார்.

The post மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இளம் செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக் அசத்தல்! appeared first on Dinakaran.

Related Stories: