விபத்தில் வங்கி ஊழியர் பலி

 

பாலக்காடு, ஜூலை 21: கேரள மாநிலம் திருச்சூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லாலூர் பகுதியை சேர்ந்த ஏபல் சாக்கோ போள் (34). இவர் குன்னம் குளத்தில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் தனது பைக்கில் வேலைக்கு சென்றார். அப்போது, அய்யன்தோஸ் அருகே முன்னால் சென்ற தனியார் பஸ்சை முந்தி செல்ல முயன்ற போது, அவரது பைக் நிலைதடுமாறி பஸ்சுக்கு அடியில் சிக்கியது.

இதில் பஸ் பின் சக்கரம் ஏறியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் அவர் பலியானார். இதனால் அவ்வழித்தடத்தில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து திருச்சூர் மாநகராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விபத்தில் வங்கி ஊழியர் பலி appeared first on Dinakaran.

Related Stories: