பேலிதளா கிராமத்தில் வனவிலங்குகள் உலா

 

ஊட்டி,ஜூலை18: பேலிதளா குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் கரடி மற்றும் காட்டு மாடுகள் உலா வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.ஊட்டி அருகேயுள்ள பேலிதளா கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு காட்டுமாடுகள் ஊருக்குள் வலம் வந்தன.இதனை தொடர்ந்து, கரடியும் ஊருக்குள் உலா வருகிறது. இந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

இதனை அப்பகுதி மக்கள் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும், பேலிதளா கிராமத்திற்குள் காட்டு மாடுகள் வருவதை தடுக்க வேண்டும். ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பேலிதளா கிராமத்தில் வனவிலங்குகள் உலா appeared first on Dinakaran.

Related Stories: