சுற்றுலா பயணிகளை கவரும் சிவப்பு நிற சால்வியா மலர்கள்

 

ஊட்டி,ஜூலை18: ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துள்ள சிவப்பு நிற சால்வியா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் முதல் சீசன் முடிந்த நிலையில் 2ம் சீசனுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பூங்காவில் உள்ள பாத்திகள் மற்றும் தொட்டிகளில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. அதே சமயம் பூங்கா முழுவதிலும் சிவப்பு நிற சால்வியா மலர்கள் பூத்துள்ளது. மற்ற மலர்கள் அதிகளவு இல்லாத நிலையில், இந்த மலர் செடிகளில் மட்டும் பூக்கள் அதிகமாக காணப்படுகிறது.

இதனால், இந்த மலர் செடிகளை கண்டு ரசித்து செல்வதுடன், அதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் போட்டோ எடுத்துச் செல்கின்றனர்.தற்போது அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், பூங்கா புல் மைதானங்கள் பச்சை பசேல் என காட்சியளிக்கின்றன.இந்தப் புல் மைதானங்களில் ஓரங்களில் பூத்துள்ள சிவப்பு நிற சால்வியா மலர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

The post சுற்றுலா பயணிகளை கவரும் சிவப்பு நிற சால்வியா மலர்கள் appeared first on Dinakaran.

Related Stories: