சிறுமி தற்கொலை முயற்சி

 

கடலூர், ஜூலை 18: கடலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்துள்ளார். இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமியின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்த நிலையில் சிறுமியை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். உடனடியாக சிறுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இது குறித்த புகாரின் பேரில் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுமி தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: