சிறுமிக்கு பாலியல் தொல்லை சித்தப்பா மீது போக்சோ வழக்கு

 

கள்ளக்குறிச்சி, ஜூலை 18: கள்ளக்குறிச்சி அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் சித்தப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள புக்கிரவாரி கிராமத்தை சேர்ந்த ராஜூ மகன் ராமர்(34), இவர் திருமணம் ஆகாதவர். இவரது அண்ணன் மகளுக்கு (15வயது), ராமர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் ராமரிடம் தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது ராமர் சிறுமியின் தாயை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அதற்கு சிறுமியின் தந்தை உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஆய்வாளர் விஷ்ணுபிரியா மற்றும் போலீசார் சிறுமியின் சித்தப்பா ராமர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை மிரட்டலுக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தந்தை மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை சித்தப்பா மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: