இலங்கை மண்ணில் முதன்முறையாக டி.20 தொடரை கைப்பற்றிய வங்கதேசம்


கொழும்பு: வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது. இதில் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0, 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றியது. 3 போட்டி கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டியில் இலங்கை, 2வது போட்டியில் வங்கதேசம் வென்ற நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 46, துசன் ஷனகா 35 ரன் அடித்தனர். வங்கதேச பவுலிங்கில் மஹேதி ஹசன் 4 விக்கெட் எடுத்தார்.

பின்னர் களம் இறங்கிய வங்கதேச அணியில் பர்வேஸ் ஹொசைன் எமோன் டக்அவுட் ஆக கேப்டன் லிட்டன்தாஸ் 32 ரன் அடித்தார். டான்சித் ஹசன் 47 பந்தில் 73, டோஹித் ஹிரிடோய் 27 ரன் அடித்தனர். 16.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 133 ரன் எடுத்த வங்கதேசம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-1 என தொடரை கைப்பற்றியது. முதன்முறையாக இலங்கையில் தொடரை வென்றுள்ளது. மஹேதி ஹசன் ஆட்டநாயகன் விருதும், லிட்டன் தாஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

The post இலங்கை மண்ணில் முதன்முறையாக டி.20 தொடரை கைப்பற்றிய வங்கதேசம் appeared first on Dinakaran.

Related Stories: