தாவரவியல் பூங்காவில் 200 தொட்டிகளில் ஆர்கிட் மலர்கள் உற்பத்தி தீவிரம்

 

ஊட்டி, ஜூலை 16: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 200 தொட்டிகளில் ஆர்கிட் மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு தினமுனம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக ஆண்டு தோறும் பூங்காவில் முதல் மற்றும் இரண்டாம் சீசன் போது பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். ஆனால், இடைப்பட்ட காலங்களில் மலர்கள் இருக்காது.

தற்போது முதல் சீசன் முடிந்த நிலையில், அனைத்து மலர் செடிகளும் அகற்றப்பட்டுள்ளன. இரண்டாம் சீசனுக்காக பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பூங்காவில் உள்ள நர்சரிகளில் விதைப்பு பணிகள் மற்றும் நாற்று உற்பத்தி துவக்கப்பட்டு நடந்து வருகிறது. இதனால், பூங்காவில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. அதேசமயம், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் இருக்க பெரிய கண்ணாடி மாளிகையில் பல ஆயிரம் மலர் தொட்டிகளை கொண்டு பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். தற்போது கண்ணாடி மாளிகையில் வைப்பதற்காகவும், இரண்டாம் சீசனின் போது அலங்காரங்கள் செய்வதற்காகவும் பூங்காவில் உள்ள நர்சரியில் 200 தொட்டிகளில் பல்வேறு வகையானஆர்கிட் மலர்கள் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. பெரும்பாலான தொட்டிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூக்கள் துவங்கியுள்ளன. இந்த தொட்டிகளில் மலர்கள் பூத்தவுடன் இவைகள் கண்ணாடி மாளிகையிலும் மற்றும் பூங்காவின் பிறப்பகுதிகளிலும் வைக்கப்பட உள்ளன.

The post தாவரவியல் பூங்காவில் 200 தொட்டிகளில் ஆர்கிட் மலர்கள் உற்பத்தி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: