வண்டலூர் அருகே தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

சென்னை: வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில், தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த காப்பகத்தில் 30க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கியுள்ளனர். அனைவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில், காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக குழந்தைகள் நல அலுவலர்களுக்கு ரகசிய புகார்கள் வந்தன.

இதையடுத்து வண்டலூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர் அதில், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து காப்பக உரிமையாளர் அருள்தாஸ் மற்றும் காப்பகத்தை சேர்ந்த பிரியா, காப்பக ஓட்டுநர் பழனி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post வண்டலூர் அருகே தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: உரிமையாளர் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: