ஐபிஎல் டிக்கெட் மோசடி தொடர்பாக ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் உள்பட நிர்வாகிகள் 5 பேர் கைது

ஐதராபாத்: ஐபிஎல் டிக்கெட் மோசடி தொடர்பாக ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் உள்பட நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐபிஎல் தொடரில் டிக்கெட் விற்பனையில் முறைகேடு என்ற குற்றச்சாட்டில் தெலங்கானா சிஐடி காவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கூடுதல் இலவச டிக்கெட்டுகள் கேட்டு ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மிரட்டல் விடுப்பதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குற்றம்சாட்டியிருந்தது. ரூ.2.3 கோடி மோசடி செய்த புகாரிலும் ஐதராபாத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளை கைது செய்தனர்.

The post ஐபிஎல் டிக்கெட் மோசடி தொடர்பாக ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் உள்பட நிர்வாகிகள் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: