கோவையில் 1998இல் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான குற்றவாளி 28 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார். 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாவை சத்தீஸ்கரில் காவலர்கள் கைது செய்தனர். குண்டு வெடிப்பு வழக்கில் கோவையை சேர்ந்த டெய்லர் ராஜா, முஜிபூர் ரகுமான், அயூப் ஆகிய 3 பேர் இதுவரை கைது செய்யப்படாமல் இருந்தனர். 1998-ல் கோவையில் 11 இடங்களில் 12 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததில் 58 பேர் பலியாகினர். 200 பேர் காயமடைந்தனர்.
The post கோவையில் 1998-ல் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான குற்றவாளி 28 ஆண்டுகளுக்கு பின் கைது appeared first on Dinakaran.
