அதைதொடர்ந்து விஷ்ணு மீது 7 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த மாதம் 19ம் தேதி அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேநேரம் விஷ்ணு ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.1.62 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தவெக நிர்வாகி விஷ்ணு மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் உள்ள அவரை கைது செய்தனர். அதனை தொடர்ந்து ஆன்லைன் டிரேடிங் மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்ற அனுமதியுடன் 3 நாள் காவலில் எடுத்து விஷ்ணுவிடம் விசாரிக்கின்றனர். இந்த விசாரணையில் ஆன்லைன் டிரேடிங் மோசடியில் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விசாரணையின் முடிவில் தான் விஷ்ணு எத்தனை கோடி வரை மோசடி செய்துள்ளார் என்பது குறித்து தெரியவரும்.
The post ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.1.62 கோடி மோசடி தவெக நிர்வாகி யூ-டியூபர் விஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.
