அதைத் தொடர்ந்து நடந்த 3வது செட்டில் சுதாரித்து ஆடிய சபலென்கா, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி வாகை சூடினார். அதன் மூலம் போட்டியில் வென்று அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். விம்பிள்டன் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டி ஒன்றில், அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ், ரஷ்ய வீரர் கரென் காஷனோவ் மோதினர். முதல் இரு செட்களை எளிதில் வென்ற டெய்லர் ஃபிரிட்ஸ், 3வது செட்டை மோசமாக ஆடி இழந்தார். அதைத் தொடர்ந்து நடந்த 4வது செட் போட்டி கடும் இழுபறியாக காணப்பட்டது. டைபிரேக்கர் வரை சென்ற அந்த செட் கடைசியில் டெய்லர் வசம் வந்தது. அதனால், 6-3, 6-4, 1-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்ற டெய்லர் ஃபிரிட்ஸ், அரை இறுதிக்கு முன்னேறினார்.
The post விம்பிள்டன் ஓபன் டென்னிஸ்: திக்… திக்… திரில்லரில் சபலென்கா சாகசம் appeared first on Dinakaran.
