ரியல் எஸ்டேட்டில் கமிஷன் தராததால் செக்யூரிட்டி மீது சரமாரி தாக்குதல்

விழுப்புரம், ஜூலை 9: விழுப்புரம் அருகே செக்யூரிட்டியை தாக்கிய பிரபல ரவுடி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே வி.புதூரைச் சேர்ந்தவர் அசோக்(எ) ரகோகத்தமன்(30). சி பிரிவு கேட்டகரி ரவுடி. இவரும் அதே பகுதியை சேர்ந்த நெப்போலியன்(எ) ராஜிவ் ஆகிய இருவரும் புதூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மனைப்பிரிவுக்கு நேற்று சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த செக்யூரிட்டி விஜய் சங்கரிடம் வீட்டுமனை விற்பனையில் தங்களுக்கு கமிஷன் வேண்டும் என்று கேட்டு தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி திட்டி மிரட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விஜய்சங்கர் அளித்த புகாரின் பேரில் பிரபல ரவுடி ரகோத்தமன் உள்ளிட்ட 2 பேரை வளவனூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரியல் எஸ்டேட்டில் கமிஷன் தராததால் செக்யூரிட்டி மீது சரமாரி தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: