இதனால் ஆத்திரமடைந்த சைதர் வாசவா, தெடியாபாடா பஞ்சாயத்து தாலுகா அதிகாரி சஞ்சய் ராவ் மீது செல்போனை வீசி தாக்கி உள்ளார். இதில் சஞ்சாய் ராவின் தலையில் காயம் ஏற்பட்டதுடன், மூக்கு கண்ணாடி உடைந்ததாக கூறப்டுகிறது. அங்கிருந்த நாற்காலிகளையும் சைதர் வாசவா தூக்கி வீசி உள்ளார். மேலும் சக்பரா தாலுகா பஞ்சாயத்தின் பெண் தலைவரையும் சைதர் வாசவா திட்டி உள்ளார்.
இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் சைதர் வாசாவாவை காவல்துறையினர் கைது செய்தனர்.
The post கொலை முயற்சி குற்றச்சாட்டு; குஜராத் ஆம் ஆத்மி எம்எல்ஏ சைதர் வாசவா கைது appeared first on Dinakaran.
