நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சிங்கமுத்துவுக்கு அபராதம் விதிப்பு

சென்னை: அவதூறு வழக்கில் ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கி சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்தது. நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சிங்கமுத்துவுக்கு ரூ.2,500 அபராதம் விதிப்பு. தன்னைப் பற்றி நடிகர் சிங்கமுத்து அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்டஈடு கோரி வடிவேலு வழக்கு தொடர்ந்திருந்தார். வடிவேலுக்கு எதிராக இனிமேல் அவதூறு கருத்தை தெரிவிக்க மாட்டேன் என்று நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்துள்ளார்.

The post நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சிங்கமுத்துவுக்கு அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: