இதுகுறித்து தகவலறிந்ததும் மோப்ப நாய் உத்தமன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு நீலாங்கரை போலீசார் விரைந்து சென்றனர். அங்கு நடிகர் விஜய் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு இருக்கிறதா என போலீசார் அதிரடி சோதனை நடத்தினார். வீட்டின் பல பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு நிபுணர்களும் சோதனையிட்டனர்.
இச்சோதனையில், நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என போலீசாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் நம்பரை வைத்து, நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை நீலாங்கரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பரபரப்பு நிலவியது.
The post நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.
