அதிலும் குறிப்பாக, அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்டலங்களைக் குறிவைத்து, அங்குள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். கடந்த 16-ம் தேதி முதல், டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளைத் தொடர்ந்து சந்தித்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டு வருகிறார்.
இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸை அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளார். ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே இன்று சமாதானம் ஏற்பட்டு, மோதல் போக்கு முடிவுக்கு வரும் என்று கட்சியினர் ஆர்வத்துடன் எதிர்பர்த்த நிலையில் ராமதாஸ் அன்புமணி இடையே சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக சந்திப்பு நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் நியமிப்பதில் ராமதாஸ் உறுதியாக இருப்பதால் சமாதான முயற்சி தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அன்புமணி ராமதாஸ் தைலாபுரத்தில் இருந்து சோகமான முகத்துடன் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, தைலாபுரத்தில் ராமதாஸை சைதை துரைசாமி மற்றும் ஆடிட்டர் குருசாமி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
The post ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே சமாதான முயற்சி தோல்வி என தகவல்..! appeared first on Dinakaran.