சிறுமியின் புகைப்படத்தை சித்தரித்து பரப்பிய இருவர் போக்சோவில் கைது சமூக வலைத்தளங்களில்

தண்டராம்பட்டு, ஜூன் 3: தண்டராம்பட்டு அடுத்த இளையாங்கன்னி ஊராட்சிக்கு உட்பட்ட தட்டரணை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி. இந்த சிறுமியின் புகைப்படத்தை ஒரு வாலிபருடன் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாய் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த ரகுராஜ்(20), ராமு(43) ஆகியோர் சிறுமியின் புகைப்படத்தை சித்தரித்து பரப்பியது தெரியவந்தது. இருவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்து தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியின் புகைப்படத்தை சித்தரித்து பரப்பிய இருவர் போக்சோவில் கைது சமூக வலைத்தளங்களில் appeared first on Dinakaran.

Related Stories: