மேட்டூர் அணைக்கு 3,352 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 3,017 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 3,352 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. திறப்பை விடவரத்து அதிகமாக இருப்பதால், நேற்று முன்தினம் 112.48 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 112.60 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 82.15 டிஎம்சி.

The post மேட்டூர் அணைக்கு 3,352 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: