ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் பிரனாய், பிரெஞ்சு வீரர் கிறிஸ்டோ போபோவிடம் 16- 21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சிந்து, சீன வீராங்கனை சென்னிடம் 9-21, 21-18, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ேஜாடியான காயத்ரி கோபிசந்த், ஜாலி ஆகியோர், சீன ஜோடியான ஜியா, சாங் ஆகியோரிடம் 8-21, 10-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினர். பெண்கள் இரட்டையர் பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் இந்திய ஜோடி சிங் சோனாலி, பிரமுதேஷ் ஜோடி ஆகியோர் ஆஸ்திரேலிய ஜோடியான சோர்வில்லே, ஏயூ ஆகியோரிடம் 21-23, 7-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினர். கலப்பு இரட்டையர் பிரிவில இந்தியா ஜோடியான காடே, கபூர் ஆகியோர் ஹாங்காக் ஜோடியான டாங்க், டிசே ஆகியோரிடம் 10- 21, 16- 21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினர்.
The post சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் சாத்விக், சிராக் காலிறுதிக்கு தகுதி: சிந்து, பிரனாய் வெளியேறினர் appeared first on Dinakaran.