கப்பல் மூழ்கியதை தொடர்ந்து கப்பலில் இருந்த நூற்றுக்கணக்கான டன் பர்னஸ் ஆயில் உள்பட எரிபொருளும் கடலில் கலந்தது. இதன் மூலம் கடும் சுற்றுச்சூழல் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கப்பல் மூழ்கிய பகுதியில் மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.
கண்டெய்னரில் திடீர் தீ
கொல்லம் அருகே சக்திக்குளங்கரை கடற்கரையிலும் ஏராளமான கண்டெய்னர்கள் கரை ஒதுங்கின. இவற்றை அப்புறப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. அங்கு குறுகலான சாலையாக இருந்ததால் கண்டெய்னர்களை அறுத்து வாகனங்களில் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. இதன்படி வெல்டிங் எந்திரத்தின் மூலம் ஒரு கண்டெய்னரை அறுக்கும் போது திடீரென தீ பிடித்தது. சிறிது நேரத்தில் தீ கண்டெய்னர் முழுவதும் பற்றி எரிந்தது.
The post சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய சம்பவம்; மாநில பேரிடராக கேரள அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.