மானாமதுரை அருகே காவலாளி கொலையில் நண்பர் கைது

மானாமதுரை, மே 30: மானாமதுரை அருகே காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்தவர் முருகன்(63). இவர் மானாமதுரை அருகே மூங்கில்ஊரணி பகுதி தென்னந்தோப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 28ம் தேதி தோப்பில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனின் நண்பரான கமுதி அருகே கண்ணார்பட்டியைச் சேர்ந்த இளமாறன்(50) என்பவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, கொலையான முருகனும், இளமாறனும் நண்பர்களாக இருந்துள்ளனர். கடந்த மே 27ம் தேதி முருகனை பார்க்க இளமாறன் வந்துள்ளார். இரவு இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் முருகனை அரிவாளால் இளமாறன் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது என்றனர்.

The post மானாமதுரை அருகே காவலாளி கொலையில் நண்பர் கைது appeared first on Dinakaran.

Related Stories: