பெண்கள் உட்பட 27 பேரிடம் போலீஸ் கமிஷனர் அருண் புகார் மனுக்கள் பெற்றார்

 

சென்னை, மே 29: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு முகாமில், பெண்கள் உட்பட 27 பேரிடம் கமிஷனர் அருண் புகார் மனுக்கள் பெற்றார். சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்த முகாமில், போலீஸ் கமிஷனர் அருண் கலந்துகொண்டு பெண்கள் மற்றும் முதியவர்கள் என 27 பேரிடம் தனித்தனியாக நேரில் சந்தித்து, அவர்களிடம் கனிவுடன் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். பின்னர் வாங்கிய மனுக்கள் மீது, புகார்களின் தன்மைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி தீர்வுகாண கமிஷனர் அருண் உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் சென்னை காவல்துறை நிர்வாக துணை கமிஷனர் சுப்புலட்சுமி உள்பட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post பெண்கள் உட்பட 27 பேரிடம் போலீஸ் கமிஷனர் அருண் புகார் மனுக்கள் பெற்றார் appeared first on Dinakaran.

Related Stories: