இதைத்தொடர்ந்து எம்எஸ்சி எல்சா 3 கப்பல் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து கேரள அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக கேரள அட்வகேட் ஜெனரல் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் கேரள சட்டத்துறை அமைச்சர் ராஜீவ் ஆலோசனை நடத்தியுள்ளார். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டால் உடனடியாக கப்பல் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர கேரள அரசு தீர்மானித்துள்ளது. இதற்கிடையே கப்பல் மூழ்கியது குறித்து சில சந்தேகங்களும் நிலவுவதால் இது தொடர்பாக விசாரிக்கவும் கேரள அரசு தீர்மானித்துள்ளது.
சரக்கு கப்பல் மூழ்கடிக்கப்பட்டதா?
கேரள மீன்பிடித் தொழிலாளர்கள் ஐக்கிய வேதி சங்க மாநில தலைவர் சார்லஸ் ஜார்ஜ் கூறியது: கொச்சி அருகே சரக்கு கப்பல் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. மூழ்கிய சரக்கு கப்பலுக்கு ரூ. 400 கோடி வரை மதிப்பு இருக்கலாம். இத்தகைய சரக்கு கப்பலின் காலாவதி 25 ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்தக் கப்பல் செயல்பாட்டுக்கு வந்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதாவது காலாவதி கடந்த பின்னரும் 3 ஆண்டுகள் இந்தக் கப்பல் இயக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் ஒரு சரக்கு கப்பலின் காலாவதி 15 ஆண்டுகள் மட்டுமே ஆகும். மூழ்கிய இந்தக் கப்பலின் செயல்பாட்டை நிறுத்தவும், வேறொரு புதிய கப்பலை கொண்டு வரவும் இந்தக் கப்பல் நிறுவனம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது. இந்தக் கப்பல் மூழ்குவதால் நிறுவனத்திற்கு எந்த நஷ்டமும் கிடையாது. முழு இன்சூரன்ஸ் தொகையும் அந்த நிறுவனத்திற்கு கிடைக்கும். இதனால் மூழ்கிய கப்பலை திருப்பி எடுப்பதற்கு அந்த நிறுவனம் முயற்சிக்காது. 26 டிகிரி மட்டுமே சாய்ந்த ஒரு கப்பல் 12 மணி நேரத்திற்குள் எப்படி முழுவதுமாக மூழ்கியது என்பதில் சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post கடலில் மூழ்கிய கப்பலால் சுற்றுச்சூழல் ஆபத்து; கப்பல் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர கேரள அரசு ஆலோசனை appeared first on Dinakaran.