செவ்வாழை ரூ.1,250க்கு விற்பனை

 

கோபி, மே 28: கோபி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் செவ்வாழை தார் 1,250 ரூபாய்க்கு விற்பனையானது.
கோபி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில் செவ்வாழை தார் ஒன்று குறைந்தபட்சம் 290 ரூபாய் முதல் 1,250 ரூபாய் வரை விலை போனது. கடந்த மாதம் வரை 1000 ரூபாய்க்கு கீழே விற்பனையான நிலையில் இந்த வாரம் 1,250 ரூபாய்க்கு விற்பனையானது.
தேன் வாழை தார் ஒன்று 160 ரூபாய் முதல் 820 ரூபாய் வரையிலும், பூவன் ரக வாழை தார் ஒன்று 220 ரூபாய் முதல் 800 ரூபாய் வரையிலும், ரஸ்தாளி தார் ஒன்று 170 ரூபாய் முதல் 670 ரூபாய் வரையிலும் விலை போனது. அதே போன்று மொந்தன் ரக வாழை தார் ஒன்று 130 ரூபாய் முதல் 420 ரூபாய் வரையிலும், ரொபஸ்டோ தார் ஒன்று 130 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையிலும், பச்சைநாடன் தார் ஒன்று 130 ரூபாய் முதல் 460 ரூபாய் வரையிலும் விலை போனது.
அதே போன்று கதளி ரக வாழை ஒரு கிலோ 21 ரூபாய் முதல் 47 ரூபாய் வரையிலும், நேந்திரன் ரக வாழை ஒரு கிலோ 17 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை விலை போனது. மொத்தம் 3,440 வாழைத்தார் வரத்து இருந்த நிலையில் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. அதே போன்று இங்கு நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் ஒரு தேங்காய் குறைந்தபட்சம் 13 ரூபாய் முதல் அதிகபட்சமாக 31 ரூபாய் வரை விலை போனது. மொத்தம் 9,486 தேங்காய் வரத்து இருந்த நிலைபயில் 2 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது.

 

The post செவ்வாழை ரூ.1,250க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: