இந்நிலையில், இந்த மெகா திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய விமானப்படையின் திறனை மேம்படுத்த அதிநவீன வசதிகள் கொண்ட 5ம் தலைமுறை போர் விமானத்தை தயாரிக்கும் திட்டத்திற்கான செயல்பாட்டு மாடலை உருவாக்க அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி, தனது தொழில்துறை ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இணைந்து செயல்பாட்டு மாடலை உருவாக்கும்’ என கூறப்பட்டுள்ளது.
The post உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 5ம் தலைமுறை போர் விமானம் திட்டத்தை தொடங்க ஒப்புதல்: பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.