சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

திருவனந்தபுரம்: பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவ்வருட பிரதிஷ்டை தினம் நாளை (5ம் தேதி) ஆகும். இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறப்பார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிரதிஷ்டை தின பூஜைகள் நடைபெறும். நாளை இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் ஆனி மாத பூஜைகளுக்காக வரும் 14ல் சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.

The post சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: