குளித்தலையில் இயன்முறை மருத்துவ முகாம்

 

குளித்தலை. மே 26: குளித்தலையில் நடைபெற்ற இயற்கை இயன்முறை மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இயன்முறை மருத்துவ குழுவினர் மற்றும் சத்தியமங்கலம் சிவசக்தி மகளிர் கல்லூரி இணைந்து நடத்தும் இயற்கை இயன்முறை மருத்துவ முகாம் குளித்தலை தனியார் மஹாலில் நடைபெற்றது. முகாமை கல்லூரி தலைவர் சுப சக்திவேல் தொடங்கி வைத்தார். கல்லூரி தாளாளர் லதா சக்திவேல் முன்னிலை வகித்தார். முகாமில் சுற்று வட்டாரத்தில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தஞ்சை இயன்முறை மருத்துவர் வேலவன், பொதுமக்களுக்கு கழுத்துவலி, முதுகு வலி இடுப்பு வலி, முழங்கால் வலி, தோள்பட்டை வலி, முதுகு தண்டுவட வலி போன்ற நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி அதற்கான பயிற்சி வழங்கினார்.
முகாமில் பயிற்சி செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

The post குளித்தலையில் இயன்முறை மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: