ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து சமூக ஊடகங்களில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலரும் தேசபக்தி கவிதைகள் பதிவிடுதல், ஓவியங்களை வரைதல் என கொண்டாடினர். நாடு முழுவதும் ஆயுத படைகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் திரங்கா யாத்திரைகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. ராஜஸ்தானின் பிகானேருக்கு சமீபத்தில் நான் சென்ற போது கூட குழந்தைகள் வரைந்த ஓவியங்களை பரிசாக கொடுத்தனர். ஆபரேஷன் சிந்தூரை போற்றும் வகையில் பல குடும்பங்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என பெயரிட்டுள்ளனர். இந்த நடவடிக்கை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், உபகரணங்கள், தொழில்நுட்பத்தின் மூலம் நமது வீரர்களின் துணிச்சலை காட்டுகிறது. சிந்தூர் நடவடிக்கை மூலம் உள்நாட்டு ஆயுத தயாரிப்புக்கு புதிய ஊக்கம் உருவாகி உள்ளது. இந்த வெற்றி நமது பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பங்களித்த ஒவ்வொரு குடிமகனின் வியர்வைக்கும் கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.
The post ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கையல்ல மாறி வரும் இந்தியாவின் அடையாளம்: மோடி பெருமிதம் appeared first on Dinakaran.