இந்நிறுவனத்தில் நேற்று மதியம், சுமார் 10க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது, புதிய மெத்தைகள் வைக்கப்பட்ட அறையில் திடீரென தீப்பற்றியது. தீப்பற்றிய சிறிது நேரத்தில் கம்பெனி முழுவதும் தீப்பரவி எரிந்தது. இது குறித்து தகவலறிந்து தேனி, போடி, ஆண்டிபட்டி பகுதிகளில் இருந்து தீயணைப்புத் துறை வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்து எரிந்து கொண்டிருந்த தீயையை போராடி அணைத்தனர். இவ்விபத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான மெத்தைகள் மற்றும் தலையணைகள் எரிந்து சாம்பலானது. இவ்விபத்து எவ்வாறு ஏற்பட்டது.
தீவிபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்குமா என தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
The post தேனி – மதுரை சாலையில் மெத்தைக் கம்பெனியில் திடீர் தீ விபத்து: ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம் appeared first on Dinakaran.