கோவை, மே 21: கோவையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், இந்து மக்கள் சேவை இயக்க தலைவர். இவருக்கு பிரகாஷ் என்ற ஆயுதப்படை போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் பணி முடிந்து கவுண்டம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள கைத்துப்பாக்கியை சுத்தம் செய்தார். அப்போது, திடீரென துப்பாக்கி வெடித்து குண்டு சீறிப் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாரும் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை.
இது குறித்த தகவலின்பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் போலீஸ்காரர் பிரகாசிடம் கைத்துப்பாக்கி வெடித்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post சுத்தம் செய்த போது போலீஸ்காரர் துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த குண்டு appeared first on Dinakaran.