திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானுபிரகாஷ்ரெட்டி சார்பில், நடிகர் சந்தானம், தயாரிப்பு நிறுவனமான நிகாரிகா எண்டர்டெயின்மெண்ட் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில் இந்த படம் வெளியாவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அந்தப் பாடலை நீக்க வேண்டும் என்றும் ஏழுமலையான் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இல்லாவிட்டால் வெங்கடேசபெருமாளின் பக்தி பாடலை ரீமிக்ஸ் செய்து பக்தர்கள் மனம் புண்படும் வகையில் செயல்பட்டதற்காக ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும். இதற்கு 15 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த பாடலை படத்திலிருந்து நீக்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சீனிவாசா கோவிந்தா பாடலுக்கான உரிமை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் மட்டுமே உள்ளது. அந்த பாடலை மற்றவர்கள் பயன்படுத்த சட்டப்படி அனுமதி கிடையாது என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார். டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இப்பாடலை பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post சீனிவாசா கோவிந்தா பாடல்: திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை appeared first on Dinakaran.