பேரன் மீது பாட்டி மயங்கி விழுந்ததில் இருவரும் பலி: உருக்கமான தகவல்கள்

நாமக்கல்: நாமக்கல்லில், இரண்டரை வயது பேரன் மீது பாட்டி மயங்கி விழுந்தார். இதில் இருவரும் உயிரிழந்தனர். நாமக்கல் அருகே வீசாணத்தை சேர்ந்தவர் அருண்குமார்(32). இவர், சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இவர்களின் இரண்டரை வயது மகன் சாய்கிரிஷ். இந்த குழந்தை நாமக்கல் இ.பி. காலனியில் உள்ள பாட்டி சாந்தி (48) வீட்டில் இருந்து வந்தது. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து அருண்குமாரும், காயத்ரியும் காரில் புறப்பட்டு நாமக்கல் வந்தனர். அப்போது, சாந்தி படுக்கை அறையில் மயங்கி விழுந்து கிடந்தார். அவருக்கு அடியில் குழந்தையும் மயங்கிய நிலையில் கிடந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் இருவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், வழியிலேயே சாந்தியும், குழந்தையும் உயிரிழந்தனர். இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில், உருக்கமான தகவல் வெளியானது. சாந்திக்கு சமீபகாலமாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு அவர் தொடர்ச்சியாக மருந்து -மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரை எடுத்துக் கொள்ளாவிட்டால் மயங்கி விழுந்து விடுவாராம். இதேபோல், நேற்று முன்தினமும் சாந்தி திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவர் குழந்தை மீது விழுந்துள்ளதால் குழந்தை மூச்சுத்திணறி இறந்து விட்டது. சாந்தியும் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

The post பேரன் மீது பாட்டி மயங்கி விழுந்ததில் இருவரும் பலி: உருக்கமான தகவல்கள் appeared first on Dinakaran.

Related Stories: