இலுப்பூர் அருகே மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு

 

இலுப்பூர், மே 19: இலுப்பூர் அருகே அரசு மதுபாட்டில் விற்றவர் மீது வழக்குப் பதிவு செய்து, 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இலுப்பூர் காவல் நிலைய சரக பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் பொது இடங்கள் மற்றும் பெட்டிகடைகளில் விற்கபடுகிறதாக என போலிசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். அதில், இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிப்பட்டி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, மலைக்குடிப்பட்டியில் உள்ள வணிக வளாகத்தின் அருகே உள்ள பகுதியில் அரசு மதுபாட்டிலகளை இதே பகுதியைச் சேர்ந்த கமலேஷ்வரன் என்பவர் விற்றது என தெரிய வந்தது. இதையடுத்து, இவரிடம் இருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, இலுப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post இலுப்பூர் அருகே மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: