சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலதிபர் மீது போக்சோ

*தந்தை கைது

பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கயிறு ஏற்றுமதி நிறுவன உரிமையாளராக இருப்பவர் அருண்குமார் (35). இவர் நடத்தி வரும் தொழிற்சாலையில் 17 வயது சிறுமி வேலை பார்த்தார். அந்த சிறுமிக்கு அருண்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அங்கு வேலைக்கு செல்வதை நிறுத்திய சிறுமி, துணிக்கடைக்கு வேலைக்கு சென்றார். அந்த கடையில் சிறுமி பணம் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து அருண்குமாருக்கு அந்த துணிக்கடை உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியை அருண்குமார் அழைத்து மிரட்டியுள்ளார். மேலும் பிரம்பால் சிறுமியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த சிறுமியின் தந்தையும் சிறுமியை பிரம்பால் தாக்கியுள்ளார்.

இதனால் அந்த சிறுமியின் உடலில் காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து சிறுமியின் தாயார், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் தொழிலதிபர் அருண்குமார் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி தெரிவித்தார்.

மேலும் பாலியல் தொல்லை தொடர்பாக உறவுக்கார பெண் ஒருவரிடமும் சிறுமி தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பெண் கண்டுகொள்ளாமல், சிறுமி தாக்கப்பட்டதற்கு உடந்தையாகவும் இருந்துள்ளார். இதையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அருண்குமார் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் உறவுக்கார பெண் மீதும் நேற்று முன்தினம் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். அருண்குமார் பிரம்பால் தாக்கியபோது கண்டுகொள்ளாமல் அவரும் தாக்கியதாக வழக்கு பதிந்து சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலதிபர் மீது போக்சோ appeared first on Dinakaran.

Related Stories: