காங்கயம் நகராட்சியில் 16 கொடிக்கம்பங்கள் அகற்றம்

 

காங்கயம், மே 31: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலை உள்ளாட்சி சாலை மற்றும் தெருக்களில் அரசியல் கட்சியினர் கொடிக்கம்பங்கள் மற்றும் கல்வெட்டு அமைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் பொது இடங்கள் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை, 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் இறுதியில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல இடங்களில் அரசியல் கட்சியினர், அமைப்புகள் தாங்களாக முன் வந்து கொடிக்கம்பங்களை அகற்றி வருகின்றனர். ஆனால், காங்கயம் நகராட்சியில் பலமுறை அறிவிப்பு தெரிவிக்கப்பட்டும் கட்சியினரின் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று நகராட்சி நிர்வாகம் சார்பில் நகரப்பகுதியில் இருந்த 16 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டது.

The post காங்கயம் நகராட்சியில் 16 கொடிக்கம்பங்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: