இதனைத் தொடர்ந்து, பிஎன்எஸ் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவை மீறியதாகவும், ஒலிபெருக்கி சட்டத்தை மீறியதாகவும் ராகுல் காந்தி உட்பட 19 காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாதவர்கள் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதற்கு பதிலளித்த ராகுல், ‘எனக்கு எதிராக 32 வழக்குகள் உள்ளன; இவை அனைத்தும் எனக்கு அளிக்கப்படும் பதக்கங்கள்’ என்றார். முன்னதாக ராகுல் காந்தியின் இந்த நிகழ்ச்சி, தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுடன் கல்வி மற்றும் சமூக நீதி குறித்து உரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், நிர்வாகம் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து, விடுதி வளாகத்தில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவது மாணவர்களின் கல்வி சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனக் கூறியது. இதையும் மீறி, ராகுல் தனது காரை விட்டு இறங்கி 2.5 கி.மீ. நடந்து விடுதிக்கு சென்று மாணவர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘என்னை யாரும் தடுக்க முடியாது; இது மக்கள் ஆதரவின் வலிமை’ என்று அவர் கூறினார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு, தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு, 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் மத்தியில் உரையாடினார்.
The post எனக்கு எதிராக தொடுக்கப்படும் எப்ஐஆர்-கள் தான் எனது பதக்கங்கள்: 100 பேர் மீது வழக்கு பதிந்தது குறித்து ராகுல் கருத்து appeared first on Dinakaran.