திருமணமான இளம்பெண் கடத்தல் வாலிபர் மீது புகார்

கிருஷ்ணகிரி, மே 16: கிருஷ்ணகிரி மாவட்டம், அனுசோனை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (25). வேன் டிரைவர். இவரது மனைவி ஜோதிகா (22). இவர் பி.செட்டிப்பள்ளி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 12ம் தேதி, வேலைக்கு சென்ற ஜோதிகா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் குடும்பத்தினர் தேடியும் அவர் கிடைக்கவில்லை. விசாரணையில், அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சசி என்பவர், ஜோதிகாவை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

The post திருமணமான இளம்பெண் கடத்தல் வாலிபர் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: