துருவ செயற்கைக்கோள் ஏவுதள வாகனம் (PSLV-C61) மூலம் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் RISAT-1B இன் பெரிய ஏவுதலுக்காக இந்தியா தயாராகி வருகிறது. இதன்படி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.59 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது.
இந்த ராக்கெட்டில் 1,710 கிலோ எடை கொண்ட இ.ஓ.எஸ்-09 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் பூமி கண்காணிப்பு பணியில் இந்த செயற்கைக்கோளும் ஈடுபடுத்தப்பட உள்ளது. இது ரிசாட்-1பி ராடார் இமேஜிங் செயற்கைக்கோளை ஏவும். ராக்கெட் ஏவப்படுவதால் பாதுகாப்பு கருதி மே 18ல் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.
The post பழவேற்காடு மீனவர்கள் மே 18ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிப்பு appeared first on Dinakaran.