திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம் உள்ளிட்ட பொக்கிஷங்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து இந்தக் கோயிலுக்கு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பத்மநாபசுவாமி கோயில் கதவில் தங்கத் தகடுகள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று பாதுகாப்பு அறையில் உள்ள தங்கத்தை கணக்கிட்டபோது அதில் 107 கிராம் தங்கம் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் 107 கிராம் தங்கம் திருட்டு appeared first on Dinakaran.