இந்த நிலையில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,தனிப்பட்ட வாழ்க்கையில் தார்மீக மதிப்புகளை புறக்கணிப்பது சமூக நீதிக்கான கட்சியின் கூட்டு போராட்டத்தை பலவீனப்படுத்துகிறது. தேஜ் பிரதாப்பின் நடத்தை குடும்ப மதிப்புகள், மரபுகளுக்கு ஏற்ப இல்லை. தேஜ் பிரதாப்பின் நடவடிக்கை என்னுடைய குடும்ப மதிப்புகளுக்கு ஏற்புடையதாக இல்லை. இனி மேல் அவருக்கு கட்சியிலும் குடும்பத்திலும் எந்த பங்கும் இருக்காது. கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு அவர் நீக்கப்படுகிறார் என குறிப்பிட்டுள்ளார். இது பற்றி பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், என்னுடைய அண்ணன் தேஜ் பிரதாப் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அவருக்கு உரிமை உள்ளது. ஆனால் சில விஷயங்களை சகித்து கொள்ள முடியாது என்றார்.
The post இளம் பெண்ணுடன் தொடர்பு மூத்த மகன் தேஜ் பிரதாப் கட்சியில் இருந்து நீக்கம்: குடும்பத்தில் இருந்தும் தள்ளி வைத்து லாலு பிரசாத் நடவடிக்கை appeared first on Dinakaran.