மாலை 4 மணிக்கு தனி விமானத்திலிருந்து விஜய் வந்திறங்கி தனது வேனில் கொடைக்கானலுக்கு புறப்பட்டார். அப்போது அவரை ரசிகர்கள் வரவேற்றனர். விமானநிலைய உள்வாயில் வழியாக வெளியில் வந்த விஜய் திறந்த வேனில் ஏறினார். அப்போது ரசிகர்கள் சிலர் வேனில் ஏறினர். இதனால் வேனின் முன்பகுதி பேனட் உடைந்து சேதமானது. மதுரை கமிஷனர் லோகநாதன் ரோடுஷோ நடத்தக் கூடாது என அறிவுறுத்தியும், அதையும் மீறி திறந்த வேனில் நின்றபடி ரசிகர்களை பார்த்து கையசைத்தும், வணக்கம் கூறியும் விமானநிலையத்திலிருந்து பெருங்குடி அம்பேத்கர் சிலை வரையிலும் ரோடு ஷோவாக நடிகர் விஜய் சென்றார்.
இதனால் மாலை 4 மணிக்கு மேல் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் செல்லும் விமானங்களில் செல்வதற்கு வந்த பயணிகள் விமானநிலையத்தை நெருங்க முடியாமல் பெரும் தவிப்பிற்கு ஆளாகினர். பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகளும் அவதிப்பட்டனர். விஜய் வருவதற்கு முன் போலீசாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் அவரை வரவேற்க முண்டியடித்து ரசிகர்கள் ஓடியதால் பலரது செருப்புகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. கூட்டம் கலைந்த பின்பு விமான நிலைய பகுதி செருப்புக்கடை போல் காட்சியளித்தது.
The post போலீஸ் கமிஷனர் எச்சரிக்கையை மீறி மதுரையில் நடிகர் விஜய் ரோடு ஷோ: ஏர்போர்ட்டில் பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.